search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவன் கல்யாண்"

    • பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்.
    • பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் ஓய்வு இன்றி கடும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இவரது நடிப்பில் ஓ.ஜி, உஸ்தாத் பகத்சிங், ஹரிஹர வீரமல்லூர் ஆகிய 3 படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் உள்ளார்.

    இந்நிலையில் பவன் கல்யாண் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.

    திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட 3 படங்களையும் முடித்துக் கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டுமென பவன் கல்யாணிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவரது தரப்பில் படப்பிடிப்பிற்கு நேரமில்லை என கூறுகின்றனர்.

    • உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி.
    • மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார்.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஐதராபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி. முன்பு 3 முறை குஜராத் முதல்-அமைச்சராக இருந்து, இப்போது பிரதமராக இருக்கிறார்.

    குஜராத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய விதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கு மாநிலத் தலைவர்கள் முன்மாதிரியாகக் காண வேண்டும்.

    மோடி எனக்கு மிகவும் பிடித்த பிரதமர், நான் அவரை மிகவும் மதிக்கிறேன், அவர் மிகவும் திறமையான தலைவர். வலுவான தலைமைத்துவம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் நாட்டை வழிநடத்த வந்துள்ளார்.

    மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார். 3-வது முறையாக பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். பிரதமர் மோடி தான் என்னுடைய ரோல் மாடல்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
    • பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசானி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை என அறிவித்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 3.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.
    • 2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இவர் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக பல கட்டங்களாக தெலுங்கு தேசம் கட்சியினரிடம் ரூ.1400 கோடியை பெற்றுள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சியினரிடம் பெற்ற பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.

    இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. அதனால்தான் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலில் சந்திக்க போவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்பதும் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம்.
    • என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர், நடிகர் பவன் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.

    திரைப்படத் துறை வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசியல் சார்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை எச்சரிக்கையாக உள்ளன.

    "முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம். இருப்பினும், திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய சொந்தப் பிரச்சனைகள் உள்ளன.

    மறைந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகர் ரெட்டி ஆகியோர் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

    சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்க கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வாராஹி யாத்திரை நடத்தி வருகிறார்.

    யாத்திரையின்போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசும்போது பிரதமர் மோடி ஜெகன்மோகனுக்கும் அவரது ஆட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால்தான் ஜெகன்மோகன் யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றார்.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் திடீரென இப்படி பேசியது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க. தனது கூட்டணியில் பவன் கல்யாண் இருப்பதாக கூறியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் மத்திய தலைமை எடுக்கும். கொள்கை முடிவுகளை இப்போதெல்லாம் எடுக்க முடியாது. பவன் கல்யாண் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார். ஜனசேனாவில் இருந்து எத்தனை பேர் சட்டசபைக்கு சென்று உள்ளனர்.

    பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி உறுதி செய்யப்படலாம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தலைமைதான் முடிவு செய்யும். பவன் கல்யாண் பேச்சுக்கள் குறித்து பா.ஜ.க. தலைமையிடம் புகார் செய்யப்படும் என்றார்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    • ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாணை ஒப்பிட முடியாது.
    • பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

    அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.

    எங்கள் கட்சிக்கு 22 எம்.பிக்கள், 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.

    கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 88 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 120 பேர் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சரின் அந்தஸ்தை வைத்து பேச வேண்டும்.

    பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார்.

    சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பெரிய பேக்கேஜை பெற்றுவிட்டார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு இராணுவ வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்ற பவன் கல்யாணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • பவன் கல்யாண் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அமராவதி:

    ஆந்திர முதல் மந்திரியாக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.

    இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்றார்.

    சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆந்திர காவல்துறை நடவடிக்கையால் ஆவேசம் அடைந்த பவன் கல்யாண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்.டி.ஆர். மாவட்டத்தில் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தங்களுடன் ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பவன் கல்யாணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    • பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • நெல்லூரை சேர்ந்த ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

    அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லூரை சேர்ந்த அவரது ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.

    அதன்படி கேரளாவை சேர்ந்த 4 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் மூலம் சேலத்தில் 470 கிலோ எடையுள்ள வெள்ளி பவன் கல்யாண் சிலையை வடிவமைத்தனர். 40 அடி நீளம், 25 அடி அகலத்தில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெள்ளி சிலையை நெல்லூர் நகர தலைவர் சுஜய் பாபு, ஜனசேனா தலைவர்கள் சென்னா ரெட்டி, மனு கிராந்தி ரெட்டி ஆகியோர் நடிகர் பவன் கல்யாணிடம் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

    • ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து ‘பொய்களை’ உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
    • கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி.

    திருப்பதி:

    ஆந்திர மாநில ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாக அரசியல் சார்ந்து புயலைக் கிளப்பி வருகிறார்.

    நேற்று முன்தினம் பவன் கல்யாண் ருஷி கொண்டா சென்றிருந்தார். அங்குச் செல்ல அவருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி அங்குச் சென்ற பவன் கல்யாண் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்தார்.

    ருஷிகொண்டாவில் பெரிய விதிமீறல்கள் அரங்கேறுகிறது. இங்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.

    இதற்கு அமைச்சர் ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து 'பொய்களை' உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. அந்த நிலம் சுற்றுலாத் துறைக்கு சொந்தமானது.

    அரசு தனது நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு என்ன ஆட்சேபனை என்று எனக்கு புரியவில்லை.

    அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி.

    அவருக்கு யாரும் சமமாக முடியாது. சந்திரபாபு நாயுடுவுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கிறார். பவன் கல்யாண் அரசு நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதை வீடியோ எடுத்துள்ளார்.

    அவர் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ப்ரோ’.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஆளுங்கட்சியினர் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் நடித்த ப்ரோ படம் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை சேர்ந்த அமைச்சர் அப்பத்திரம் பாபுவை கிண்டல் அடிப்பது போல காட்சி இடம் பெற்றுள்ளது.

    நகைச்சுவை நடிகர் ப்ருத்விராஜ், அமைச்சரைப் போன்ற உடை அணிந்து சாலையில் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது ஆளுங்கட்சியினர் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு கூறியதாவது:-

    "நடிகர்களாக மாறிய அரசியல்வாதிகள் என்.டி.ராமராவ் அல்லது சிரஞ்சீவி அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், பவன் கல்யாண் திரைப்படம் மற்றும் அரசியல் இரண்டையும் விரும்பி, இரு துறைகளுக்கும் அநீதி இழைத்து வருகிறார்".

    பவன் கல்யாண் என்னை அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாததால், என்னைக் கொச்சைப்படுத்த ஷியாம்பாபு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். என்னோட கேரக்டருக்கு 'ராம்பாபு' என்று பெயர் வைத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாரையாவது குறிவைத்து படம் எடுத்தால் வெற்றியடையாது என்பதை படக்குழுவினர் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது.
    • பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார்.

    நடிகர் பவன் கல்யாண் நடித்த 'ப்ரோ' சினிமா கடந்த 28-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், உலகம் முழுவதும் வெளியாகும் எங்கள் திரைப்படத்தில் மதிப்பிற்குரிய ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் உடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.


    மேலும் ஜெகன்மோகன் ரெட்டியை விட பவன் கல்யாண் விருப்பமான தலைவர் என ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் வரவேற்பு அளித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது இன்னும் நீக்கப்படவில்லை அதனை உடனடியாக நீக்க வேண்டுமென அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார். அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நடிகை ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×